• Sep 20 2024

திருமணம் முடிந்த சில வாரங்களில் நிக்கி கல்ராணி எடுத்த முடிவு-தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. இப்படத்தைத் தொடர்ந்து ஜெய், ஜுவா, சிவா, ராகவா லாரன்ஸ் ,ஆதி ,பிரபு தேவா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் சமீபத்தில் நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மரகதநாணயம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள்.

திருமண வரவேற்ப்பில் சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது நிக்கி கல்ராணி கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சிஅடுத்த மாத தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே நிக்கி மீண்டும் கெரியரில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Advertisement

Advertisement