• Sep 21 2024

முக்கிய பிரபலத்திற்கு நோ சொன்ன நயன்தாரா…அடடே இப்பிடி ஒரு கதை இருக்கா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன். தொழிலில் கிங்காக விளங்கும் இவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக 'தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இயக்குநர் ஜெ டி ஜெர்ரி இயக்கியுள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ராவ்டேலா நடித்துள்ளார். இப்படம் நேற்றுத் திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும் மோசமான விமர்சனங்களையே இன்று வரை பெற்று வருகின்றது.

மேலும் இப்படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ஊர்வசி ரவுத்தேலாவுக்கு இப்படத்தில் நடிப்பதற்கு ரூபா 20 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படம் தொடர்பாக மற்றுமொரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியதாகவும், ஆனால் நயன்தாராவோ இப்படத்திற்கு நோ சொன்னதாகத் தகவல்கள் பரவி வருகின்றன .

அத்துடன் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பளமாக நயன்தாராவுக்குத் தரத் தயாராக இருந்தனர் படக்குழுவினர். இருப்பினும் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்றாராம் நயன்தாரா. இதையடுத்து லெஜண்ட் சரவணன் தனது படத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளை ஏற்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து தான் ஊர்வசியை அழைத்து வந்து தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தாராம் நம்ம லெஜண்ட் ஹீரோ.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement