• Apr 26 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நட்சத்திர ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னைக்கருகில் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

பல கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இத் திருமணத்தில் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவரின் திருமணம் பற்றி ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது.

அதாவது நயனின் திருமணம் நடக்கும் விடுதியின் அருகில் பப்ளிக் பீச் உள்ளது.அதற்கு இன்று பலரும் வாக்கிங் செல்வதற்கு வந்து இருந்தார்கள்.

அவர்கள் அங்கு வருவதற்கு மறுப்பு தெரிவிக்க கோபப்பட்ட மக்கள் இது பப்ளிக் பீச் .இங்க வரவேண்டாம் என்று நீங்க எப்படி சொல்லலாம் என்றும் ,நாங்க நயன்தாரா திருமணத்திற்காக வந்தோமா நாயை வாக்கிங் கூட்டிட்டு தான் வந்தோம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகள் இவர்களின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்கு தான் போடப்பட்டது.ஆனாலும் இதற்கு கோபப்பட்ட மக்கள் தமது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement