• May 21 2024

முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா-அடடே ..வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகிலே லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவரே நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ‘ஐயா’ என்ற படத்தினூடாக கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று உச்ச நட்சத்திர நடிகையாக மாறியிருக்கின்றார்.

இவர் சமீபத்தில் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அதாவது அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகின்ற ‘ஜவான்’ என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அத்தோடு சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘இறைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

இவ்வாறு பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற நயன்தாரா நடிக்க உள்ள 75-ஆவது படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை Trident Arts - Naad Studios - Zee Studios என மூன்று நிறுவனம் ஒன்றிணைந்து தயாரிக்கிறார்கள்.

நிலேஷ் கிருஷ்ணா எனும் புதுமுக இயக்குனர் நயன்தாராவின் 75வது படத்தை இயக்கிறார். இவர், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் ஆவர்.

அத்தோடு இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாரா செஃப் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் முதல் முறையாக நடிகை நயன்தாரா செஃப்பாக நடிக்கவுள்ளார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement