• May 01 2024

கண்ணம்மாவுக்கு லட்சுமி கொடுத்த அதிர்ச்சி-பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த ரி.ஆர்.பி ரேட்டிங்கிலும் ரொப் 5 இற்குள் வந்தது.இவ்வாறு இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கண்ணம்மா வெளியே சென்று வந்த பின்னர் லட்சுமி இன்னைக்கு உன்னை லாரி மோத வந்திருக்குமா என கேட்க ஆமா உனக்கு யாரு சொன்னது என்ன கேட்கிறார் கண்ணம்மா. உடனே லட்சுமி ஹேமா தான் சொன்னா அவளுக்கு உன் பேரு கண்ணம்மா என்று இன்னைக்கு தான் தெரியும் என சொல்ல கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். உடனே சௌந்தர்யாவுக்கு போன் போட்டு இந்த விஷயம் பற்றி சொல்கிறார்.

அதன் பின்னர் வீட்டில் ரோஹித் கண்ணம்மாவை மோத வந்த லாரி யாருடையது அது எதிர்பாராத விதமா நடந்ததா இல்ல திட்டமிட்டு கொலை செய்ய நடந்ததா? என தன்னுடைய நண்பர்கள் மூலமாக கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த விஷயம் அறிந்து வெண்பா ஷாக்கடைகிறார்.

ஹாஸ்பிடலில் ஜானகி குடும்பத்தார் அனைவரும் வந்திருக்க ஃபேமிலி யூனியன் பங்க்ஷன் நடக்கிறது. பின்னர் சௌந்தர்யா வேணு உள்ளிட்டோர் ஜானகி மேடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தன்னுடைய குடும்பத்தாரை சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்லும் ஜானகி உனக்கு இந்த கொடுப்பினை கிடைக்கல என சௌந்தர்யாவிடம் சொல்லி பாரதி மனைவியை பிரிந்து வாழ்வதாக சொன்னதையும் கண்ணம்மா கணவனை பிரிந்து வாழ்வதாக சொன்னதையும் சொல்கிறார்.

எனக்கு தெரிஞ்சு பாரதி மேல எந்த தப்பும் இருக்காது அவன் அவங்க தங்கமான பையனா இருக்கான் உன் மருமகன் மேல தான் தப்பு இருக்கும் அவள நீ கூட்டிட்டு வா.மேலும் அவகிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் என சொல்ல சௌந்தர்யா என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement