• May 20 2024

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி வெளியான விசயங்கள்-அட இப்படியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். மேலும் அவர்களின் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு கசிந்த அழைப்பிதழில் மகாபலிபுரத்தில் திருமணம் என்பது தெரிய வந்துள்ளது.

மகாபலிபுரத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தாலிகட்டு நடக்குமாம். இந்து முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது.

மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் சேதுபதி, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சமந்தாவுக்கு மட்டும் தான் அழைப்பாம். அத்தோடு திருமணத்தை அடுத்து சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகினரை அழைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

மேலும் இருவரும் படங்களில் கமிட்டாகியிருப்பதால் திருமணத்தை முடித்த கையோடு தேனிலவுக்கு செல்ல நேரமில்லையாம் என கூறப்படுன்றது.இதனால் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஷூட்டிங்கிற்கு கிளம்பப் போகிறார்களாம்.

நயன்தாராவுக்கு எப்பொழுது தான் திருமணம் நடக்கும் என்று காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்தோடு நல்ல காரியம் செய்கிறீர்கள் அன்பான இயக்குநரே, இப்படி ஒரு மனைவி கிடைக்காதென விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அத்தோடு திருமணத்தை முடித்து விட்டு அஜித் குமாரின் ஏ.கே. 62 பட வேலையை துவங்கப் போகிறாராம் விக்னேஷ் சிவன்.

Advertisement

Advertisement