• Jun 06 2025

சீதாவுடன் முத்துவை இணைத்துக் கதைக்கும் மனோஜ்.! கோபத்தில் முத்து.! டுடே எபிசொட் வேற லெவல்..

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜ் கிட்ட போய் இண்டைக்கு நான் ஒரு birth day பார்ட்டிக்குப் போகணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் யாரு கூட போற என்று சொல்லு பிறகு அம்மா என்னத்தான் கேட்பா என்றதுடன் அம்மா கேட்டால் பதில் சொல்லணும் என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி நீ எல்லாத்துக்கும் அம்மாவை கேட்கிறா என்றால் என்னதுக்கு அப்ப என்னைக் கல்யாணம் செய்தனீ என்று கேக்கிறார்.

இதனை அடுத்து மனோஜ் யார் அந்த friend பையனா, பொண்ணா என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி பொண்ணு தான் என்று சொல்லிட்டு எனக்கு டைம் ஆகுது நான் போகப்போறேன் என்கிறார். அதைக் கேட்ட மனோஜ் இவள் சொல்லுறது உண்மை தானா ஏற்கனவே பணக்காரி என்று பொய் சொன்னால் அதை மாதிரித்தான் இதுவுமா என்று ஜோசிச்சிட்டு ரோகிணி பின்னாடியே போறார்.


அதைத் தொடர்ந்து ரோகிணி ஒரு கடையில போய் கேக் வாங்கிறார். அதைப் பார்த்த மனோஜ் அந்த கடைக்குப் போய் இப்ப கேக் வாங்கிக் கொண்டு போனவங்க அந்த கேக்கில என்ன பெயர் போட்டிருக்காங்க என்று கேக்கிறார். அதுக்கு அந்த கடைக்காரர் மகேஷ் என்று போட்டாங்க என்கிறார். அதைக் கேட்டவுடனே மனோஜ் அப்ப அவனுக்குத் தான் பிறந்தநாளா என்கிறார்.

பின் முத்து குடிச்சிட்டு வந்து விஜயாவை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த அண்ணாமலை ஏன்டா இப்புடிக் குடிச்சு உடம்பை கெடுக்கிற என்று சொல்லுறார்.  அதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து பொண்டாட்டி புருஷனோட பேச்சைக் கேட்காததால தான் குடிச்சேன் என்கிறார். பின் மனோஜ் முத்துவப் பாத்து அந்தக்காலத்து ஆட்கள் மாதிரி உனக்கும் பொண்டாட்டியோட தங்கச்சியை கல்யாணம் செய்யுற பிளான் இருக்கோ என்று கேட்கிறார். அதுக்கு முத்து மனோஜை அடிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement