• May 21 2024

குணசேகரன் கொடுமையால் பர்ஸ்ட் நைட்டுக்கு சம்மதித்த ஆதிரை... ஏமாற்றத்தால் கண் கலங்கிய கரிகாலன்... 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில் கரிகாலன் வீட்டில் இருக்கும் பொம்பளைகளை கடுமையாக திட்டி கொண்டு இருக்கிறார். சமயலறையில் நந்தினி, ரேணுகா, ஜனனி மற்றும் ஆதிரை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஆதிரையிடம் தனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட  சொல்கிறார்கள். மேலும் "ஆதிரையின் என்ன முடிவு செய்து இருக்கிறாள் என்பது தெரிய வேண்டும். கரிகாலனை வீட்டுக்குள் அனுமதித்து இருப்பதும் அவனை எதிர்க்காததும் ஒரு வகையில் தப்பு தான்" என்கிறாள் ஜனனி. 


பின்னர் 'ஆதிரை உன்னுடைய முடிவு என்ன' என கேட்டதும் 'நான் அருணிடம் பேச வேண்டும். அவன் என்னை வேண்டாம் என ஒதுக்கவில்லையே. கல்யாணம் செய்து கொள்ள வரும் போது தானே விபத்து நடந்தது. ஒரு முறை அருணிடம் பேசினால் தான் என்னால் முடிவு எடுக்க முடியும்' என்கிறாள் ஆதிரை.

மறுபுறம் கீழே வந்து பார்த்த குணசேகரன் "இது என்ன அடுத்த மீட்டிங்கா? சடங்குக்கு ஏற்பாடு செய்ய சொன்னா இங்க உட்கார்ந்து வெட்டியா பேசிகிட்டு இருக்கீங்க. நந்தினி உன்னால ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா?" என்கிறார். அதற்கு நந்தினி "என்னால முடியாது. இது ஆதிரையின் வாழ்க்கை. அவளுக்கு விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இந்த கல்யாணத்தையே அவள் ஏத்துக்கவில்லை" என்கிறாள்.


"இங்க பாரு ஆதிரை இனிமே எல்லாம் அமைதியா போக முடியாது வெட்டி வீசிட்டு போய்கிட்டே இருப்பேன்" என குணசேகரன் சொல்ல, அருவமனையை எடுத்த ஆதிரை நீ என்ன செய்தாலும் நான் இவன ஏத்துக்க மாட்டேன். இவன எனக்கு பிடிக்கல. இவன் எனக்கு வேண்டாம் என ஆத்திரத்தில் கத்துகின்றார். 

இதற்கு குணசேகரன் "இந்த ஜென்மத்துல அவன் தான் உன்னுடைய புருஷன் அவனோட தான் நீ குடும்பம் நடத்த வேண்டும். இவளுங்க பேச்சை கேட்டு ஆடுறீயா வா அந்த ஜான்சி ராணி வீட்டில் உன்னை விட்டு விடுகிறேன்" என இழுத்து செல்கிறார் குணசேகரன். என்ன செய்வது என தெரியாமல் "நான் இதற்கு சம்மதிக்கிறேன் நீங்க ஏற்பாடு செய்யுங்கள்" என சொல்கிறாள் ஆதிரை. 

மறுபுறம் ஜீவனந்தத்திடம் "கௌதம் ஜனனி நண்பன் என சொன்ன பிறகும்  உங்களால்  எப்படி அவனை நம்ப முடிகிறது" என கேட்கிறாள் பர்ஹானா. நம்மிடம் இருந்து விஷயங்களை தெரிந்து கொண்டு ஜனனியிடம் போய் சொல்ல மாட்டான் என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என் கேட்கிறாள். கௌதம் பெரிய அளவில் எதுவும் பிரச்சனை செய்யமாட்டான் என தோன்றுகிறது. கௌதம் நிச்சயம் நாளை ஜனனியை சந்தித்து பட்டம்மாள் சொத்து பற்றி கேட்டு தெரிந்து கொள்வான். நாளை உங்களுக்கு புரியும் என சொல்லிவிட்டு செல்கிறார். 


இதனைத் தொடர்ந்து கரிகாலனுக்கு ஆதிரைக்கும் முதலிரவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். ஆதிரை நல்லபடியாக கரிகாலனிடம் பேசவும் அவளை நம்பி விடுகிறான். ஆனால் ஆதிரை எதிர்காலம் பற்றி பேசலாம் என சொல்லி எனக்கு அருணை தான் ரொம்ப பிடிக்கும். நான் அவனை தான் விரும்புகிறேன். இதை புரிந்து கொண்டு ஒதுங்கி போய்விடு என கரிகாலனிடம் சொன்னதும் அவன் அழுது கொண்டே குணசேகரனிடம் செல்கிறான். 

அதற்கு அவனை மிரட்டி நீ போய் இப்ப அவரை கூப்பிட்ட நான் பல உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும் என சொன்னதும் எதை எதையோ நினைத்து அழுகிறான் கரிகாலன். நான் கண்டதையும் நினைப்பதற்கு முன்னர் நீயே என்ன என்று சொல்லிவிடு என்கிறான். நீ நினைத்தது தான் என சொல்லி கரிகாலனை கலங்க விட்டுவிட்டாள் ஆதிரை. இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்திருந்தது.

Advertisement

Advertisement