• May 20 2024

அண்ணன் தம்பிகளை மண்டபத்தை விட்டு துரத்திய ஜீவா- கையெடுத்துக் கும்பிட்ட தனம்- கோபத்தில் முல்லை குடும்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவா இன்றும் அண்ணனிடம் பல கேள்விகளைக் கேட்கின்றார். அதில் என் புள்ளைக்கு டைப்பர் வாங்கனும் என்றால் கூட உங்க கிட்ட தான் வந்து நிற்கணும் எனக்கு சம்பாதிக்க தெரியாதவன் தானே என் பொண்டாட்டி புள்ளை கேட்கிறதை என்னால வாங்கிக் கொடுக்க முடியாது நான் சும்மா இருக்கிறவன் தானே என புலமபி அழுகின்றார்.


இடையில் தனமும் கதிரும் ஜீவாவை சமாதானம் செய்ய முற்பட ஆனால் ஜீவா எதையும் கேட்பதாக இல்லை. இது ஒரு புறம் இருக்க முல்லையின் அம்மா கார் வாங்கினது தான் உங்களுக்கு பிரச்சினையா? எல்லாமே வயித்தெரிச்சல் பொறாமை அதான் இப்படி பேசிட்டு இருக்கிறீங்க என்று சொல்ல மீனாவின்“ அப்பா சண்டைக்கு போகின்றார்.

இப்படி இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க ஜீவா அத்தையும் சொல்லட்டும். இன்னும் யாருக்கெல்லாம் என்னைத் திட்டனுமோ அவங்களும் சொல்லிடுங்க என சொல்கின்றார். பின்னர் தனம் கையெடுத்து கும்பிட்டு யாரும் பேசாதீங்க என்று கூறுகின்றார். வீட்டுக்கு வா போகலாம் ஜீவா என்று சொல்ல நான் எதுக்கு வரணும் அது கதிரோட வீடு எங்களுக்கு கதிரும் கண்ணனும் தான் தம்பிகள் நான் இல்லை நான் ஒதுங்கிடுறேன் என்று கூறுகின்றார்.


இதனைக் கேட்டு கதிர் அண்ணா நீ குடிச்சிருக்கிறியா என்று கேட்க ஜீவா அப்போ நான் குடிச்சாத் தான் தைரியமாகப் பேசுவனா தைரியம் இல்லாதவன் என்று சொல்லுறியா? என்று கேட்டதோடு நான் இனி வரப் போறதில்லை எல்லோரும் இங்க இருந்து கிளம்புங்க என துரத்துகின்றார். இதனால் அனைவரும்  அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement