• Sep 21 2024

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,  கடந்த வாரம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

கேங்ஸ்டர் ஜானரை பின்னணியாக வைத்து 1975ல் நடக்கும் பீரியட் படமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்தது. இதனால் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மாஸ் காட்டியது. இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் தலா 7 கோடி ரூபாய் வரை வசூலித்தது. 


உலகம் முழுவதும் மொத்தமாக இதுவரை 45 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டே தினங்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு அவர் ரூ.7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement