• May 22 2024

முல்லையின் வளைகாப்புக்கு குடும்பத்துடன் போக கிளம்பிய ஜீவா- கண்ணன் கெஞ்சியும் சம்மதிக்காத ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் ஜனார்த்தனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது மீனா ஜீவாவிடம் முல்லையின் வளைகாப்புக்கு கட்டாயம் போகணும்டா மூர்த்தி மாமா கதைக்காட்டி என்ன அதான் கதிர் கதைக்கிறான்ல அவருக்காகவாவது போகணும் என்று ஜீவாவை சமாதானம் செய்கின்றார். முதலில் மறுப்புத் தெரிவித்த ஜீவா பின்னர் சரி போகலாம் என்று சம்மதிக்கிறார்.


தொடர்ந்து விடிந்ததும் ஜனார்த்தனும் அவரது மனைவியும் ஜீவாவும் மீனாவும் வளைகாப்புக்கு போறாங்களோ தெரில என்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு மீனா வந்த முல்லையில் வளைகாப்புக்கு போகும் விடயத்தைக் கூறுகின்றார். இதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

தொடர்ந்து ஐஸ்வர்யா நீண்ட நேரம் தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பதை பார்த்த கண்ணன் சீக்கிரம் கிளம்பு ஐஸ்வர்யா எனத் திட்டுகின்றார். பின்னர் ஐஸ்வர்யா உங்க அண்ணன் எல்லோருக்கும் ஒரே மாதிரி சேட் எடுத்த விடயத்தைக் கூறுகின்றார். ஆனால் சேட் எங்க வைச்சேன் என்பதை மறந்திட்டேன் எனக் கூறுகின்றார்.கண்ணன் கெஞ்சியும் அந்த சேட்டைக் கொடுக்காமல் வேறொரு பேர்பிள் கலர் சேட்டைக் கொடுக்க மனமில்லாமல் அதை போட்டுக் கொள்கின்றார்.


தொடர்ந்து மூர்த்தியும் அதே கலரில் சேட் போட்டிருக்க கதிரும் அதே கலரில் போட்டுக் கொள்கின்றார். தொடர்ந்து ஜீவாவும் தனம் வாங்கிக் கொடுத்த சேட்டை போடாமல் அவரும் பேர்பிள் கலரிலேயே சேட்டை போட்டுக் கொள்கின்றார். மேலும் மீனா ஜீவாவிடம் அங்க என்னை நடந்தாலும் நீ அமைதியாக இரு யாரிடமும் எதுவும் பேசாத எனச் சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement