• Apr 30 2024

மண்டபத்திலிருந்து காணாமல் போன அப்பத்தா.. ஜனனிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பரபரப்பு திருப்பங்களுடன் எதிர்நீச்சல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.

ஆரம்பத்திலே ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் வழிபடப்பாகி வந்த இந்த சீரியல் ஆதிரை மற்றும் அருண் கல்யாண பேச்சு ஆரம்பம் ஆனதிலிருந்து கொஞ்சம் டல்லடிக்க தொடங்கி விட்டதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

இருந்த போதிலும் இதன் காட்சிகளை இன்னும் வேகமாக நடத்தாமல் இருந்து வருகிறார் இயக்குநர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது குணசேகரன் சரி முதலாளி நிச்சய ஓலையை படிக்க சொல்லுங்க என சொல்ல மண்டபத்துக்குள் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவிவர வெளியில் ஜனனி அப்பத்தா இந்த பக்கம் தான் போனாங்களாம் என சொல்லி சக்தியுடன் அப்பத்தாவை தேடிச் செல்கிறார்.


இதனால் நடக்கப்போவது என்ன? அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என்ற திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement