• Sep 20 2024

திருமணம் முடிந்த கையோடு எங்களுக்கு விருந்து வைத்தது தளபதி விஜய் தான்- நடிகை ஆர்த்தி கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகையாக வலம் வருபவர் தான் ஆர்த்தி. இவர் பல மன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டிருக்கின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.அதன் மூலம் அண்மையில் கோஃம் டூர் சென்றிருந்ததோடு தனது வீட்டை ரசிகர்களுக்கு சுற்றியும் காட்டினார்.


மேலும் இவர் நடிகர் கணேஷைத் திருமணம் செய்திருப்பதோடு தனது கணவருடன் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றார்.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில்  கடந்த வாரம் திருமண சுற்று நடந்தது. அதில் தனது திருமணம் குறித்த விடயங்களை பேசியிருந்தார்.

அதில் தனது திருமணத்திற்கு முகூர்த்தப் புடவை மற்றும் வேட்டி சட்டைகளை நடிகர் ரஜினிகாந்த் வாங்கித்தந்ததாகவும் தனது திருமணத்தில் கலைஞர் கலந்து கொண்டு ஆசீர்வாதத்தை வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

அத்தோடு திருமணம் முடிந்தவுடன் முதல்முதலாக என்னை விருந்துக்கு அழைத்தது தளபதி விஜய் தான். அவர் வீட்டில் தான் விருந்து உண்டோம்.வெளிநாட்டில் படப்பிடிப்புக்காகச் சென்ற கமல்ஹாசன் சேரும் போன்பண்ணி வாழ்த்துக் கூறியதாக தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement