• Sep 19 2024

கோபியை வீட்டிற்கு கூட்டிவரும் ஈஸ்வரி! குடும்பத்தைவிட்டு வெளியேறுவாரா பாக்கியா! அதிரடியான புதிய திருப்பம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின்  ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இதுவரையில்,நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிட்டலில் இருக்கும் கோபிக்கு இப்போ நோர்மலாக இருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ராதிகா. இப்பவே கோபியைப் பார்த்தாகனும் என்று கிளம்புகிறார் ஈஸ்வரி. நானும் அப்பாவ பாத்தே ஆகணும் கூடவே போகிறார் இனியா.இறுதியாக இவங்க சொன்னா கேக்க மாட்டங்க, அம்மாவையும் இனியாவையும் கூட்டி போய்ட்டு வா என செழியனுக்கு கூறுகிறார் தாத்தா.

இந்த நிலையில் ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி தனது பையன் கோபியை வீட்டிற்கு அழைத்து வருவது போல இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 



இவ என்ன தான் கெஞ்சினாலும் அவன் வர மாட்டான் என கோபியின் அப்பா சொல்லி முடிப்பதற்குள், ஈஸ்வரியுடன் வீட்டிற்கு வருகிறார் கோபி. இதை பார்த்த வீட்டார் அனைவரும் அதிர்ச்சியில் எழுந்து நிற்கின்றனர்.

கோபி கைய பிடித்து இழுத்து வரும் ஈஸ்வரி, அப்பாவ உள்ள கூட்டி போ என இனியாவுக்கு சொல்கிறார். இதையடுத்து, முதல்ல அவர எதுக்கு இந்த வீட்டுக்கு கூட்டி வந்திங்க என கோவத்தில் கத்துகிறார். எனினும் உள்ள செல்கிறார் கோபி. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

இதையடுத்து, என்ன செய்வதென்று யோசிக்கின்றார் பாக்கியா.புதிய திருப்பங்களுடன் நகர இருக்கும் பாக்கியலட்சுமியில் அடுத்து பாக்கியா வீட்டை விட்டு வெளியே செல்வாரா என பொறுத்திருந்து பாப்போம்.  இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement