• May 20 2024

ஹாஸ்பிட்டலில் கோபியை கண்டு கொள்ளாமல் இருந்த இனியா- முறையான பதிலடி கொடுத்த எழில்- கோபியோடு சண்டை பிடித்த ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா மாத்திரை சாப்பிட்டதை அறிந்த பாக்கியா எழிலை எழுப்பி நடந்த விஷயத்தைக் கூறி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வருகின்றார். ஹாஸ்பிட்டலுக்கு வந்ததும் தாத்தா நடந்ததைக் கூற எழில் கோபியிடம் சண்டை போடுகின்றார். நல்லா பார்த்துக் கொள்வேன் என்று கதை எல்லாம் சொல்லி இப்போ இந்த நிலமைக்கு ஆக்கிட்டீங்களே எனத் திட்டுகின்றார்.


பின்னர் ராதிகா நாங்க திட்டல கண்டிச்சோம் என்று சொல்ல எழில் நீங்க யார் அவளை கண்டிக்கிறதுக்கு என பதிலடி கொடுக்கின்றார். பின்பு இனியாவைப் போய் உள்ளே பார்க்கலாம் என்று சொன்னதும் முதலில் கோபி உள்ளே போகின்றார். கோபி போனதும் ராதிகாவும் பொக ராமமூர்த்தி தடுத்து பாக்கியாவை அனுப்புகின்றார்.

கோபியைப் பார்த்து எதுவும் பேசாத இனியா பாக்கியாவைக் கண்டதும் பேசுகின்றார். தான் மாத்திரை போட்ட விஷயத்தையும் கூற பாக்கியா ஆறுதல் படுத்துகின்றார். பின்னர் கோபி தன்னை இனியா கண்டு கொள்ளாதது போல இருந்ததால் வெளியே வந்து இருக்க ராதிகா தன்னை உள்ளே அனுப்பாத விடயத்தைச் சொல்கின்றார்.


தொடர்ந்து கோபியிடம் சண்டைபிடித்துக் கொண்டிருக்க கோபியும் எவ்வளவு சமாதானம் செய்தும் ராதிகா அடங்குவதாக இல்லை. பின்னர் மயூவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்கின்றார். தொடர்ந்து வீட்டில் எழில் அமிர்தாவுக்கு போன் பண்ணி மெதுவாக விஷயத்தை சொல்லுமாறு சொல்கின்றார். இதனால் ஈஸ்வரி,செழியன் , ஜெனி ஆகியோர் இருக்கும் போது அமிர்தா வந்து இனியாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிட்டலில் இருக்கிறா என்று சொன்னதும் செழியனும் ஈஸ்வரியும் பதறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். பின்னர் ஜெனியிடம் அமிர்தா இந்த விஷயத்தை சொல்ல அவர் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement