• May 20 2024

'இரண்டு படம் பண்ணிட்டால் நான் தான் பெரிய இயக்குநர் என்று திமிரா இருக்கிறாங்க'-கோபத்தில் கத்திய சமுத்திரக்கனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்தர வேடங்களில் நடித்து மிகவும் பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. இவர் நடிப்பையும் தாண்டி இயக்குநராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் முதலில் ‘உன்னைச் சரணடைந்தேன்’திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படம் வெற்றியடையாததால் ‘நெறஞ்ச மனசு’என்னும் படத்தை இயக்கியிருந்தார். இருப்பினும் இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. இதனால் சமீபத்தில், ஒரு பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், அவரே இதனை மனதார ஒத்துக்கொண்டார். ஆனால் இதுபோன்ற தோல்விகள் எனக்கு மேலும் ஆசைப்படக் கற்றுக் கொடுத்தன என்றும் எனக்கும் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன். அதாவது, “ஒரு விஷயம் கெடச்சா சந்தோச படுங்க. கிடைக்காட்டி ரொம்ப சந்தோச படுங்க” இந்த அணுகுமுறைதான் என்னை அடுத்ததடுத்த படங்களைப் இயக்க வழிவகுத்தது என்று கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், முதலில் “உன்னைச் சரணடைந்தேன்” படத்தை எடுத்தேன் இந்த படம் இப்போ எடுத்திருக்க கூடாதுனு சொன்னாங்க, அதன் பின் ‘நெறஞ்ச மனசு’ படத்தை விஜயகாந்த் வைத்து எடுத்தேன் அதுவும் ஓடவில்லை. உடனே அப்பதான் நான் யோசித்தேன் நம்மகிட்ட ஏதோ ஒன்னு குறை இருக்கு, இன்னும் கத்துக்கணும் அப்படின்னு யோசிச்சு கொண்டு மதுரையில் பருத்திவீரன் படப்பிடிப்பு நடைபெற்றது உடனே அங்கு சென்றேன்.

அமீரிடம் இந்த படத்தில் நான் வேலை செய்கிறேன் என்று சொன்னேன், ஆனால் அவர் என்னிடம் என்னடா இரண்டு படங்களை இயக்கி இங்க வந்திருக்க அப்படின்னு என்னிடம் கேட்டார். ஆனால் நான் எடுத்து இரண்டு படமும் ஓடவில்லையே அப்போ நான் இன்னும் கத்துக்கணும் அதனாலதான் உங்ககூட உதவி இயக்குநராக வேலைசெய்கிறேன் என்று அமீரிடம் சொன்னாராம்.

மேலும், என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வது முதலில் இறங்கி வாங்க தெரியாத விஷயத்தை கத்துக்கோங்க என்று சொல்லவேன், ஆனால் இன்னும் சிலர் 2 படம் பண்ணிட்டு நான்தான் பெரிய இயக்குநர்னு திமிரா இருக்கிறாங்க என்று கட்டடத்துடன் பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியது யாரென்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை என்னும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement