• Sep 20 2024

என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன்- நடிகை வனிதா போட்ட உணர்ச்சி வசமான பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்தாலும் பல திரைப்படங்களில் தற்பொழுது வாய்ப்பினைப் பெற்று நடித்து வருபவர் தான் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் என்பதோடு பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி தனித்து வாழ்கின்றார்.

சில காலம் பட வாய்ப்பின்றி இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே பிரபல்யமானார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி இருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது தம்பியான அருண் விஜய் நடிப்பில் யானை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்பபடத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார்.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. யானை படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை வனிதா, கடினமான உழைப்பும்,விடா முயற்சியும் நிச்சயம் தோற்காது என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, யானை படம் வெற்றிபெற்றதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர், படத்தில் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி இருக்கீர்கள் , உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

இதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், மதிப்புமிக்க பொருட்கள், சொத்துக்களை எதிர்பார்க்காத குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் பல லட்சியங்களை வைத்து இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போல் தலை நிமிர்ந்து உழைத்து சாதிப்பார்கள். குடும்ப ஆதரவு இல்லாமல் சுயமாக உழைத்து முன்நேறி வந்த பெண்கள். அன்பாக எங்களை நேசிப்பவர்களையும் நாங்கள் நேசிக்கிறோம்.

இணையத்தில் சில செய்திகள் பரவி வருவதைப் பார்த்து … நான் என் வலியையும் துயரத்தையும் விட்டுவிட்டு ஒரு பெரிய சிறந்த மனிதனாக மாறிவிட்டேன். வாழ்க்கையில் பாவம் செய்த, என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய , என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன். எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பல ரசிகர்கள் எதற்கு எடுத்தாலும் சண்டைப்போடும் வனிதாவா இது என கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement