• Sep 20 2024

என் வாழ்நாள் கனவு நிறைவேறியது போல் எனக்கு இருக்கிறது - பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகர் ஜெயராம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ளார்.

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் எப்பொழுது இந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், நடிகர் ஜெயராம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியன் நம்பி ஆக நடித்துள்ளார். இது குறித்து நடிகர் ஜெயராம் கூறுகையில், எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்,

அதேபோல்தான் எனக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது, பொன்னியின் செல்வன் போல் ஒரு வரலாறு சார்ந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம், என் வாழ்நாள் கனவு நிறைவேறியது போல் எனக்கு இருக்கிறது என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement