• May 21 2024

அதில போய் நின்று ஆடவே பிடிக்காது வேற வழி இல்லை என்று பண்ணினேன்- கடுமையாக கண்டித்த ஸ்ருதிஹாசன்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ருதிஹாசன் பாடகியாக தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கியவர். குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய தந்தையின் படத்தில் நடித்துள்ள இவர், இசையமைப்பாளராகவும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் இவரது நடிப்பில் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹரெட்டி ஆகிய படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. 

 இந்நிலையில், அடுத்ததாக பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கேஜிஎப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார்.ஸ்ருதிஹாசன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். சாந்தனுவுடன் காதலில் உள்ள ஸ்ருதிஹாசன், தன்னுடைய காதலையும் அவ்வப்போது முத்தங்கள் உள்ளிட்டவை மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 


 ஸ்ருதிஹாசன், சமீபத்தில் அவருடைய வெர்ஜினிட்டி குறித்த ரசிகர்களின் கேள்விக்கும் கூலாக பதிலளித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது சிரஞ்சீவியுடன் தான் நடித்திருந்த வால்டர் வீரய்யா படம் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு, பனிப்பிரதேசத்தில் டூயட் பாடல் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பாடலில் சிரஞ்சீவி கோட் சூட் போட்டு நடித்திருந்திருப்பார். ஆனால் ஸ்ருதியோ, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் சேலை கட்டி நடித்திருப்பார். இந்தப் பாடலை குறிப்பிடும்வகையில், ஹீரோயின்கள் மட்டும் மிகவும் குறைவான ஆடை அணிந்து பனிப்பிரதேசத்தில்கூட ஆட்டம் போடவுள்ளதாகவும் இதை மாற்ற வேண்டும் என்றும் ஸ்ருதி கேட்டுக் கொண்டுள்ளார்.


 முக்கியமாக தனக்கு ஸ்னோவில் ஆடவே பிடிக்காது என்றும் ஆனால் பாடலுக்கு தேவை ஏற்படுவதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்களை வெளியிட்டு வருகிறார். கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அதையெல்லாம் யோசிக்காமல் தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய விருப்பத்திற்கு தக்கவாறு வாழ்ந்து வருகிறார்.


Advertisement

Advertisement