• Sep 21 2024

தற்கொலையா..? என்னால நம்ப முடியல... இது வேற ஏதோ பிரச்சினை... பிரபல தயாரிப்பாளர் கூறிய பகீர் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

12 ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மரணத்தை அறிந்த பலரும் நேரடியாக வீட்டிற்குச் சென்று தங்களது அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் டி. சிவாவும் நேரில் சென்று தனது இரங்கலினைத் தெரிவித்து இருக்கின்றார். 

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "விஜய் ஆண்டனியை போலவே மீராவும் திறமையான பொண்ணு எனவும், படிப்பிலும் ரொம்பக் கெட்டிக்காரி, பள்ளியில் கூட பல விருதுகளை வென்றிருக்கின்றார்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "இப்படி பல விதத்திலும் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக் கூடிய பெண் தான் மீரா, அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று சொன்னால் அதை என்னால் இப்பவும் நம்பவே முடியவில்லை. இங்கே வர வரைக்கும் அது பொய்யான ஒரு செய்து என்றே நினைத்திருந்தேன், ஆனால் மார்சரிக்கு கொண்டு போயிட்டாங்க என்பதை அறிந்ததும் என்னால தாங்கவே முடில" எனவும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு "இந்த வயதில் அந்த குழந்தை உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு செல்லும் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, வேறு ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது" எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "எப்படி இருந்தாலும் மீரா அவர் அப்பாவிடம் மனம் விட்டு பேசக் கூடியவர். அவரும் தனது குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தையும் தைரியத்தையும் கொடுத்துள்ளார். அவருடைய மகளுக்கு இப்படி ஆகிவிட்டது என நினைக்கும் போது நெஞ்சம் இப்பவும் பதறுகிறது. விஜய் ஆண்டனியை ஃபேஸ் பண்ணக் கூட எனக்கு பயமா இருக்கு" எனவும் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் டி. சிவா.

Advertisement

Advertisement