• May 19 2024

அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கவுள்ள நடிகர் மாரிமுத்துவின் குடும்ப உறுப்பினர்..? வெளியான லேட்டஸ் தகவல்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்ததுப் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. அந்தவகையில் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இயக்குநராக, நடிகராக, உதவி இயக்குநராக, எழுத்தாளராக வலம் வந்த மாரிமுத்துவை உலகம் முழுவதும் அறியும் முகமாக மாற்றியது 'எதிர்நீச்சல்' சீரியல் தான்.


இந்த சீரியலில் 'இந்தாம்மா ஏய்' என இவர் பேசிய வசனம், பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. இவரின் நடிப்புக்காவே தொடர்ந்து சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் கோடிக்கணக்கில் உண்டு. அந்த சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்து காட்டியவர், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரசிகர்களை விட்டு மறைந்துவிட்டார்.

அதாவது சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு வியர்த்துள்ளது இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த மாரிமுத்து, அவரே காரை ஓட்டி கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் போதே அவரது உயிர்பிரிந்துள்ளது.


இதனையடுத்து எதிர்நீச்சலில் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் எனப் பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் கேள்விக்கு இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அதாவது பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டாலும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவில்லை. 


இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது "அடுத்த ஆதி குணசேகரனாக நடித்து தன்னுடைய அண்ணன் இடத்தை தானே நிரப்புகிறேன்" என என மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாது "வேறு எந்த நடிகர் நடித்தாலும், நான் அண்ணனுக்காக டப்பிங் கொடுக்கிறேன்" என அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்தளவிற்கு உண்மை என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement