• Jun 27 2025

"பாதம் தொட்டு வணங்கி இதனைக் கேட்டுக்கொள்கிறேன்.."இயக்குநர் பாலா பேச்சு..!

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

"பறந்து போ" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும், விமர்சகர்களையும் நோக்கி ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை வைத்தார்.


“இந்த நேரத்தில் விமர்சகர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள் – எப்படியாவது இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்கி இதனைக் கேட்டுக்கொள்கிறேன்,” என உருக்கமாக கூறினார்.


அதேசமயம் படத்தை இயக்கிய இயக்குநர் ராம் பற்றியும் பாராட்டிப் பேசிய அவர் “ராம் மாதிரி ஒரு இயக்குநர் நம் திரைத்துறைக்கும், தமிழகத்திற்கும் தேவையானவர்” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement