• Sep 19 2024

நடிகை சுகன்யாவின் மகள் சினிமாவில் என்றி கொடுக்கப்போகின்றாரா... இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் விளங்கியபவர் நடிகை சுகன்யா.இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்..

இவ்வாறு இருக்கையில் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளை இருக்கின்றது. பின் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்து சென்றது இல்லை. மேலும் அவரை குறித்து எந்த செய்திகளும் வராமல் இருந்தது.

மேலும் சினிமாவின் சாயமே படாமல் சுகன்யா அவருடைய மகளை தனிப்பட்ட முறையில் வளர்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய தனிப்பட்ட தகவலை கூட இதுவரை வெளிப்படையாக சுகன்யா தெரிவதில்லை.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் சுகன்யா தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பலரும் நடிகை சுகன்யாவின் மகளா இது! என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு உள்ளார்கள்.

அத்தோடு தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை வெளிப்படையாக மீடியாவிற்கு காட்டுவதில்லை. அந்த வரிசையில் சுகன்யாவும் ஒருவராக இருந்தார். ஆனால், சுகன்யா உடைய மகள் என்ன செய்கிறார்? சினிமாவில் நடிக்க விருப்பம் இருக்கிறதா? என்ற வேறு எந்த தகவலுமே தெரியவில்லை. இனிவரும் காலங்களில் சுகன்யா இது குறித்து சொல்வாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement