• Sep 20 2024

நடிகை கங்கணாவுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்; குழப்பத்தில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாகவும் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை கங்கணா ரனாவத். திரைப்படம் முதல் பெண்ணியம் வரையிலான பிரச்சனைகளில் பொதுவெளியில் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும், பதிவிடுவதிலும் கங்கனா ரணாவத் வெளிப்படையாகவே பலராலும் அறியப்படுகிறார்.

திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் பாசுவின் மூலமாகவே கங்கணா ரணாவத்தின் நடிப்பு வாழ்க்கை செப்டெம்பர் 2005 - இல் தொடங்கியது, அதாவது அவர் ஒரு ஹோட்டலில் காபி குடிப்பதைக் கண்ட அனுராக் பாசு, கேங்க்ஸ்டரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அவரை அணுகினார். இவ்வாறாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை கங்கணா ரணாவத் தனது 22 வயதில் மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருதுகள் பலவற்றையும் வென்றிருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியாகி இருந்த 'தக்காட்' என்ற ஆக்ஷன் படம் படு தோல்வியை சந்தித்திருந்தது. அதாவது சுமார் 90 கோடியில் உருவான இப்படம் வெறும் 3 கோடியினை மட்டுமே வசூலித்திருந்தது. இதனால் திரையுலகில் இழந்த மார்க்கெட்டை மறுபடியும் பெற்றுக் கொள்ளும் நோக்கில், இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து 'எமர்ஜென்சி' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை உருவாக்க இருக்கின்றார் கங்கணா.

இந்த நிலையில் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "கங்கணா நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளேன்" என்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இருவரும் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு "நடிகை கங்கணாவை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரின் கனவு படத்தில் பணி புரிய உள்ளேன்" எனவும் பதிவிட்டுள்ளார்.

கங்கணாவின் 'தலைவி' படத்திற்கும் இவரே இசை அமைத்துள்ள நிலையில் இருவரும் மறுபடியும் 'எமெர்ஜென்சி' படத்தில் இணைகிறார்களா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்தில் இணைய உள்ளனரா என்ற குழப்பத்தில் உள்ளனர் ஜி.வி.பிரகாஷின் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement