பிக்பாஸ் ஆரம்பமாகி இரண்டாவது வாரமும் முடிவடையும் நிலையில் நேற்று ஜி.பி. முத்து வெளியேறினார். தனது மகனை பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் மதித்தனர்.
ஆனால் ஜி.பி. முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகின.
இவ்வாறுஇருக்கையில், ஜி.பி. முத்துவிற்கு மதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்க்கவேண்டும். என்ன நடக்கப்போகிறது என்று.
Listen News!