• May 18 2024

சிம்பு பற்றிப் படுமோசமாகப் பேசிய சிவகார்த்திகேயன்... அவர் அப்படிப்பட்டவரா... வெடித்த புதுச் சர்ச்சை...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய திரைப்பயண ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து அதன்மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 


இந்நிலையில் சிவகார்த்திகேயன் மேடையில் மிமிக்ரி செய்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது அந்த வீடியோவானது அவர் சினிமாவில் நடிக்க வரும் முன்னர் எடுத்தது போல் தெரிகிறது. 

அதில் சினிமாப் பிரபலன்களான சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது சிம்பு அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார் என்கிற கான்செப்டில் மிமிக்ரி செய்து பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.


அதாவது சிம்புவைப் போன்று பேசுகையில் "கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தா அதை நிறைய பேரை வாங்க வைப்பேன் சார்" என்றார். இவ்வாறு சிம்புவின் குரலில் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் பிரபலமடைவதற்கு முன் நகைச்சுவைக்காக இப்படி பேசி இருந்தாலும், தற்போது அவர் ஒரு முன்னணி நடிகனாக இருப்பதால் அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் பல கிளம்பி உள்ளன. 

அதிலும் குறிப்பாக இந்த வீடியோ பார்த்து கடுப்பான சிம்பு ரசிகர்கள் ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயனை பிரித்தெடுத்து வருகின்றனர்.  இருப்பினும் சிவகார்த்திகேயனும், சிம்புவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட பெங்களூருவில் நடைபெற்ற சைமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக அவர்கள் இருவரும் நட்புடன் இருப்பது பிடிக்காமல் தான் யாரோ சிலர் இதுபோன்று பழைய வீடியோவை வைரலாக்கி இருவருக்குள்ளும் பிரச்சினையை தூண்டி விட நினைப்பதாக சிவகார்த்திகேயனின் ரசிகர்களில் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ...!


Advertisement

Advertisement