• Sep 20 2024

ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி...கொந்தளிக்கும் ஈஸ்வரி...அடுத்து நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கோபி -ராதிகா உறவு பற்றி குடும்பத்தில் உள“ள அனைவருக்கும் தெரிந்து விட பாக்கியா கோபிக்கு டைவேர்ஸ் கொடுத்து விடுகின்றார்.பின்னர் கோபியிடம் சண்டை போட்ட பாக்கியா நான் வீட்டை விட்டு போக மாட்டுன் நீங்கள் போங்கள் எனக் கூறி அவரை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்.

வீட்டை விட்டு சென்ற கோபி நேராக ராதிகாவை சந்தித்து, உனக்காக தான் வீட்டை விட்டு வந்தேன். உனக்கை திருமணம் செய்ய நினைத்ததால் தான் எனக்கு இந்த நிலை. நீயும் என்னை ஏற்காவிட்டால் நான் செத்து விடுவேன் என புதிய டிராமாவை ஆரம்பிக்கிறார். 



மேலும் கோபி வெளியே சென்ற அடுத்த நிமிடம் கோபியின் அப்பா ராமமூர்த்தி, ராதிகா வீட்டிற்கு வந்து சத்தம் போடுகிறார். ஆனால் ராதிகாவின் அண்ணனும் பதிலுக்கு சத்தம் போட்டு, ராமமூர்த்தியை வெளியே துரத்தி விடுகின்றனர்.வீட்டில் உள்ளவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் கோபி வெளியே வந்து விட்டார். 

கோபி தான் பாவம் என ராதிகாவின் அண்ணன் கூற  ராதிகாவை அதை ஆமாம் என்று சொல்லி, யோசிக்க துவங்குகிறார். அங்கு வீட்டில் உள்ள அனைவரும் பாக்யா மீது கோபத்தை காட்ட, எழில் வழக்கம் போல் அம்மாவிற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். மேலும் இப்படி கடந்த வார எபிசோட் முடிவடைய, வரும் வார எபிசோடிற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை என்னும் துாண்டி உள்ளது.

அதில், வீட்டை விட்டு போன கோபி நேராக ராதிகா வீட்டிற்கு போனதை ஈஸ்வரியிடம் சொல்கிறார் ராமமூர்த்தி. ஈஸ்வரி அந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்லி, அவரை திட்டுகிறார்.அதோ நிற்காமல் ராதிகா வீட்டிற்கு போய் ரூம், ரூமாக சென்று கோபியை தேடி பார்க்கிறார். 



கோபியை நாங்கள் ஒழித்து வைக்கவில்லை என ராதிகா வீட்டில் உள்ளவர்கள் ஈஸ்வரியிடம் சொல்கிறார்கள். பதிலுக்கு ஈஸ்வரியும் சண்டை போட்டு, கோபியை ஒழித்து வைத்து உன் மகளை வாழ வைக்கலாம் என நினைக்காதே. அதை நடக்க விட மாட்டேன். நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள் என மீண்டும் சாபம் கொடுக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, போதும் நிறுத்துங்கள் என சொல்லி கத்துவதுடன், ஈஸ்வரியையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். 



இதற்கு பின்னர்  வழக்கம் போல் ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் கோபிக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதனால் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பமடைகிறார் ராதிகா.இது தான் வரும் வாரத்தில் பாக்யலட்சுமி சீரியலில் நடக்க போகிறது.



மேலும்  இதை பார்த்த நெட்டிசன்கள், ராதிகா குடும்பம் போல 4 குடும்பம் இருந்தால் போதும் நாட்டில் இருக்க அத்தனை குடும்பமும் நாசமாக போய் விடும். ராதிகாவிற்கு என்று சுய புத்தியே கிடையாது. யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டி, அவர்கள் சொல்வது போலவே மாறி விடுவாரா? ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகி விட்டது என தெரிந்தும் பழகுகிறார்.மேலும்  அவரது குடும்பம் யார், மனைவி யார் என தெரிந்து கொள்ள கூடவா நினைக்க மாட்டார்? இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் ராதிகா - கோபி கல்யாணம் நடக்கனும் என்று  ராதிகாவோட அம்மாவும், அண்ணனும் பிடிவாதமாக பேசுவது ரொம்ப ஓவரா இருக்கு என திட்டி தீர்க்கிறார்கள்.

இன்னும் சிலர், இந்த வாரமும் சண்டை தானா? உங்க சண்டை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க. முதலில் கோபி - ராதிகா திருமணம் நடக்குமா? நடக்காதா? அதற்கு பதில் சொல்லுங்க. எங்களால் சஸ்பென்ஸ் தாங்க முடியல. அடுத்து என்ன நடக்கும் என நாங்க ஒன்று யோசித்தால், ட்விஸ்ட் என்ற பெயரில் நீங்கள் ஒன்றை மாற்றி விடுகிறீர்களே என ஆர்வ மிகுதியால் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement