• Sep 20 2024

முதல் முறை அனிருத்திற்கு விதிக்கப்பட்ட தடை- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகின்றார். 

மேலும் இந்த தொடர் ஆரம்பதித்த நாளிலிருந்தே அனிருத்துக்கும், இயக்குநருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். 

சமீபத்தில் அனிருத் இயக்குநருடன் கோபித்துக் கொண்டு படப்பிடிப்பில் இருந்து  திடீரென வெளியேறி விட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.



அனிருத் தனக்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தாக சொல்லப்படுகிறது. கன்னட சின்னத்திரையில் வெளிப்புற படப்பிடிப்பில் நடிகைகள் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனிருத் கேரவன் கேட்டது பிரச்சினை ஆனது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது.மேலும்  இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு 2 ஆண்டுகள் தொடரில் நடிக்க தடை விதித்தது. 

இதனால் தற்போது நடித்து வரும் அனைத்து தொடர்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கன்னட சின்னத்திரையில் ஒரு நடிகருக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement