• May 19 2024

சாதாரணமாகவே நான் மிகுந்த போராட்ட குணம் கொண்டவள்- முக்கிய பேட்டியில் ஓபனாக பேசிய சமந்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் இவர் இந்திய அளவில் சிறப்பான நடிகையாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

படங்களில் நடிப்பதைத் தவிர விளம்பரப் படங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறார். சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷயுடன் இணைந்து பங்குபற்றியிருந்தார்.அக்ஷயுடன் பாலிவுட்டில் சமந்தா புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.


இந்நிலையில் இவரது நடிப்பில் யசோதா மற்றும் குஷி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் யசோதா 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இதேபோல விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்துள்ள குஷி படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான சூட்டிங் காஷ்மீரின் பல பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்காகவும் ரசிகர்களை மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, சமந்தாவின் சமீபத்திய பேட்டியில் தன்னுடைய குணநலனை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த படங்களின்மூலம் தன்னை தொடர்ந்து நிரூபிக்க போராடி வருவதாக அவர் கூறியுள்ளார். சாதாரணமாகவே தான் மிகுந்த போராட்ட குணம் கொண்டவள் என்றும் சமந்தா கூறியுள்ளார்.










Advertisement

Advertisement