• Sep 20 2024

விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு திடீரென போட்ட தடை-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இயக்குநரின் நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய அயராத முயற்சியினால் தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இவரைப் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வெளியாகினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது கெரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.இவர் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அத்தோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது.

 பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

வாரிசு படப்பிடிப்பு முழு செக்யூரிட்டியுடன் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் நேற்று வாரிசு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதன் காரணமாக படக்குழு பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

எனினும் இந்த நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் யாரும் இனிமேல் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வாரிசு படம் திரைக்கு வருவது வரை எந்த ஒரு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியில் கசியக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement