• Sep 21 2024

மூர்த்தி குடும்பத்தில் வெடிக்கும் சண்டை- வீட்டை விட்டு செல்லும் கதிர் முல்லை-பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படுஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இத் தொடரானது அண்ணன் தம்பிகளை மையாமாகக் கொண்டு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகின்றது.
இவர்களை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்ததாக வரலாறே வந்துவிடும் போல் தெரிகிறது.

இந்நிலையில் இந்த சீரியல் விறுவிறுப்பு கட்டத்தைதை நோக்கி நகருகின்றது. அதாவது இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கடன் வாங்கி ரீட்மன்ட் செய்து வருகிறார்கள் மூர்த்தி மற்றும் தனம்.

இவ்வாறு இருக்கையில் மூர்த்தி வீட்டிற்கு தனம் குடும்பத்தினரும் முல்லை குடும்பத்தினரும் மீனா குடும்பத்தாரும் வந்து நிற்கிறார்கள்.அப்பொழுது மீனாவின் தந்தை கதிரை சரமாரியாக பேசுகிறார்.இவருக்கு சம்பாதிக்க வக்கில்லை என்றால் இவர் ஆஸ்பத்திரிக்கு போகமால் இருந்திருக்க வேண்டும் என கூறுகின்றார்.

இதைக்கேட்ட முல்லையின் தாய் என் மருமகனை பார்த்து வக்கில்லை என்று கேட்டிங்களாமே என கூற அதற்கு பளார் என பதிலளித்தார் மீனாவின் தந்தை.

உங்க மருமகன் வாங்கின கடனுக்கு என் மகள் எப்படி அடைக்க வேண்டும்.என கேட்டதும் தனம் தனது வளையலை கழட்டி குடுத்து விட தனத்தின் தாய் அதை கொடுக்க வேண்டாம் என தடுத்து விடுகிறார்.

இதனை கேட்டு கதறி அழுகிறார் முல்லை.கதிரும் அழுதபடியே இந்த வீட்டை விட்டு போகின்றோம்.உங்கள் கடன் அனைத்தையும் நாங்கள் கட்டுகின்றோம்.அதற்கு கொஞ்ச டைம் தாங்கள் எனக் கூற, மூர்த்தி அழுதபடியே நீ போனால் திரும்பி வரக் கூடாது என கூற முல்லையை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு செல்கின்றார் கதிர்.

இதோ அந்த ப்ரமோ...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement