• Sep 19 2024

என்னை நோயாளி ஆக்காதே மீனாவைத் திட்டிய தனம்- ஐஸ்வர்யா செய்த காரியத்தால் கடுப்பான மூர்த்தி- மகிழ்ச்சியில் கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வளைகாப்புக்காக எல்லா வேலைகளையும் தனம் ஓடி ஓடிப் பார்க்கின்றார். ஆனால் மீனா தனத்தை எந்தவொரு வேலையையும் பார்க்க விடாமல் தானே எல்லாவற்றையும் எடுத்துச் செய்கின்றார். இதைப் பார்த்த மூர்த்தி ரொம்ப சந்தோஷமடைகின்றார்.இருந்தாலும் தனம் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்னை நோயாளி என்று நினைவுபடுத்தாத என சொல்கின்றார்.


தொடர்ந்து கண்ணன், ஐஸ்வர்யா வளைகாப்புக்காக ரெடியாகி இருப்பதைப் பார்த்து புகழ மீனாவும் முல்லையும் கண்ணனை நக்கலடிக்கின்றனர். அத்தோடு மேடையில் கண்ணன் எல்லாம் சரியா இருக்கா என்று பார்க்க ஜீவாவும் கதிரும் கண்ணனும் நக்கலடிக்கின்றனர்.

தொடர்ந்து முல்லையின் அம்மா, ஐஸ்வர்யாவின் சித்தி, மீனாவின் அப்பா என எல்லோரும் ஒவ்வொருவராக வருகின்றனர். தொடர்ந்து வளைகாப்பு நிகழ்வும் ஆரம்பமாக ஐஸ்வர்யா வீடியோ எடுக்க மூர்த்தி உட்பட எல்லோரும் கடுப்பாக ஐஸ்வர்யாவின் சித்தி போனைப் பறித்து உனக்கு பாவம் பார்த்து வளைகாப்பு பண்ணுறாங்க உனக்கு வீடியோ தான் இல்லாத குறையா எனத் திட்டுகின்றார்.


அத்தோடு போனையும் பறித்து வைக்க எல்லோரும் நலங்கு வைக்கின்றனர். தொடர்ந்து கண்ணனும் நடனமாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர் எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கின்றனர். இதனைப் பார்த்து தனம் சந்தோஷமடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement