• Sep 20 2024

கணவன் இல்லாத சமயத்தில் கன்னிகா என்ன செய்து வருகின்றார் தெரியுமா?- ஆச்சரியப்பட்டு வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராகவும் கவிஞராகவும் வலம் வருபவர் தான் சினேகன். இவர் தமிழில் இதுவரைக்கும் 2500 பாடல்களுக்கு மேலே எழுதியுள்ளார். அந்த வகையில் மௌனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே, சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, பருத்திவீரன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான சூரரைப் போற்று திரைப்படத்திலும் காட்டுப் பயலே என்னும் பாடலையும் எழுதியிருந்தார். இது தவிர இவர் தான் எழுதினாரா என்று பெயர் தெரியாமலேயே பல ஹிட் பாடல்கள் இருப்பதும் முக்கியமாகும்.

பாடல் ஆசிரியர் என்பதை விட பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலமே பிரபல்யமான இவர் பத்து ஆண்டுகளாக தான் காதலித்து வந்த கன்னிகா ரவி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நடிகர் கமலஹாசன் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்

காதல் ஜோடிகளாக இருந்து கொண்டிருக்கும் இவர்கள், பல நிகழ்ச்சிகளிலும் ஒரே மாதிரியான கலர் உடைகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கன்னிகா என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பலர் கேட்டு வந்த நிலையில், தனிமையில் இருக்கும் பொழுது கன்னிகா ரவி என்ன செய்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது தனிமையில் இருக்கும் பொழுது ஓவியம் வரைவதை தனது பொழுதுபோக்காக செய்து வருகிறார். அச்சு அசல் நேரில் பார்க்கும் சீனரிகளைப் போலவும், பல உருவங்களையும் வரைந்து அசத்தி வருகிறார் கன்னிகா. இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு திறமையா என்று ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement