தமிழ்சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் எனப் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சுமார் 90களின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்.
இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்காததால் சினிமா வாழ்க்கை அவருக்கு இறங்கு முகமாகவே இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை.
ஆனால் 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான பிறகு த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்தும், புகழும் உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை என்ற கதாபாத்திரமும், இவரின் இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து இழுத்தது.
இதன் காரணமாக தற்போது த்ரிஷாவுக்கு படவாய்ப்புகள் மளமளவென வந்து குவிகின்றன. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க த்ரிஷா பெயர் தான் அடிபடுகிறது. இவ்வாறாக பட வாய்ப்புக்கள் வந்து குவிவதனால் திடீரென சம்பளத்தை த்ரிஷா உயர்த்திவிட்டாராம். அதாவது இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Listen News!