• Sep 19 2024

இயக்குநரிடம் கதையை மாற்ற சொன்னாரா விஜய்..? திரையுலகில் எழுந்த சர்ச்சை... முற்றுப்புள்ளி வைத்தது எப்படி..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்றுவரை சினிமாத் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்த வண்ணமே இருக்கின்றார். இந்நிலையில் இவரின் நடிப்பிலும் வம்சி இயக்கத்திலும் தற்போது 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.



அதனைத் தொடர்ந்து 'தளபதி 67 உருவாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து விஜய்யின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் தொடர்பான ஒரு விடயம் ஆனது தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.  


அதாவது விஜய்யின் மீது இருந்த பெரும் சர்ச்சைகளில் ஒன்று, இயக்குநர்களிடம் கதையை கேட்டுவிட்டு தனக்கு பிடித்தது போல் கதையை மாற்ற சொல்வார் என்பது தான். இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் கூட ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.



இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைகாட்சி பேட்டி ஒன்றில் விஜய் பங்கேற்ற போது அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. 


இதற்கு விஜய் பதிலளிக்கையில் "கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை மாற்ற நான் சொல்ல மாட்டேன். அதை சொல்லவும் எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு எனக்கு அது பற்றிய அறிவு கிடையாது. 


ஒரு சில படங்கள் பண்ணும்போது மட்டும் தான், என்னுடைய ரசிகர்களுக்காக ஒரு குத்து பாடல் வேண்டும் என்று கேட்பேன். ஒரு மாஸ் சண்டை காட்சி வேண்டும் என்று கேட்பேன், அவ்வளவுதான். எனக்கு கதையை இப்படி திருப்பி போடு. இந்த சீனை இப்படி மாற்று என்று சொல்ல தெரியாது" என்று கூறி தன் மீதிருந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.


இவ்விடயம் ஆனது காலம் கடந்திருப்பினும் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement