• Sep 20 2024

சிவகார்த்திகேயனிற்கு கடனா..? மொத்தத்தையும் ஏற்றுக்கொண்ட பிரபல நிறுவனம்... !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

மிமிக்ரி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அந்த துறையில் சாதிக்க பல பயிற்சிகள் எடுத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தனது வருங்காலத்திற்காக அழகாக பயன்படுத்தி ஒவ்வொரு லெவலாக வளர்ந்து இப்போது இந்த இடத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரின் திரைபடங்கள் தொடர்ந்து உலகளவில் ரூ. 100 கோடியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.

அதன்படி கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தின் மூலம் பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.எனினும்  இதற்கிடையே இது குறித்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை தொடர்ப்பு கொண்டு அவரின் கடனை மொத்தமாக ஏற்றுக்கொள்ள கேட்டுள்ளார்களாம்.

 அதற்கு சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து அவர்களின் நிறுவனத்திற்கு கால் ஷுட் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படத்திற்கு டேட் கொடுக்காமல் அவரின் இரண்டு திரைப்படங்களுக்கு மட்டுமே டேட் கொடுத்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Advertisement