• Apr 26 2024

பணத்துக்காக நடிக்கும் ஆதி- சந்தியாவுக்கு எதிராக நடந்த சதி.. இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஹிட்டாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் ராஜா ராணி.இதன் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 ஆதி ஜெசி வீட்டுக்குச் சென்று பணத்தை கறக்க திட்டம் போட்டு தனியாக சென்று இப்போது சம்பாதிக்கும் பணம் ஜெசி யின் மருத்துவ செலவுக்கே சரியாக இருக்கிறது வீட்டுக்கு வேற பணம் தர வேண்டும் பார்ட் டைம் ஜாப் பற்றி விசாரிப்பதற்காக வந்தேன் என பரிதாபமாக பேச ஜெசியின் அப்பா பணத்தை எடுத்து கொடுக்கிறார். 

மேலும் இந்த விஷயம் ஜெசிக்கு தெரிந்தால் சண்டை போடுவா என ஆதி கூற அவளுக்கு தெரியாது கவலைப்படாதீங்க என சொல்கிறார் ஜெசியின் அம்மா சொல்கிறார்.



அடுத்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது சந்தியா குறித்து விசாரிக்க சரவணன் சைக்கிள் ரேஸ் நடப்பது பற்றி கூறுகிறார். மேலும் சிவகாமி சந்தியா முதல் மூன்று இடத்துக்குள் வரவேண்டுமென கூற ஆதி அதெல்லாம் கஷ்டம் என ஏளனமாக பேச சிவகாமி பூஜை அறைக்கு சென்று காசு முடிந்து வைக்கிறார்.



மேலும்  இந்த பக்கம் சந்தியா சைக்கிள் ரேஸ் 23வது இடத்தை தேர்வு செய்திருக்க யாரோ ஒரு மர்மநாபர் உள்ளே புகுந்து அவருடைய இடத்தை ஒன்றாவது இடமாக கம்ப்யூட்டரில் மாற்றுகின்றனர். அடுத்து சரவணன் சேத்தனுக்கு சந்தியாவிடம் கொடுக்குமாறு ஒரு கிப்டை அனுப்பி வைக்க அவர் ஜோதியுடன் சென்று சந்தியாவுக்கு இந்த கிப்டை கொடுக்கிறார். பிறகு சந்தியாவும் சரவணனும் ஃபோனில் அன்பாக பேசிக்கொள்ள இத்துடன் ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement