• Sep 20 2024

சிரஞ்சீவி மற்றும் தமன்னாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்- என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

முன்னாள் நடிகை மேனகாவின் மகளும் நடிகையுமான கீர்த்தி சுரேஷ் மலையாளப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


ஆனால், ரஜினி முருகன் படத்தின் மூலம் அனைவராலும் பரவலாக அறியப்பட்டார். இப்படத்தின் வெற்றியையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரெமோ படத்தில் நடித்திருந்தார். இப்படமும் வெற்றிபெற்றதால் இவரது மார்க்கெட் ஏறியது.


தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார்.அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.


இது தவிர நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இப்படமானது மலையாள ரீமேக்கில் உருவாகி வருகின்றது.இதில் போலோ சங்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் காரெக்டரில் சிரஞ்சீவியும் அவரது தங்கையாக கீர்த்தி சுரேஷும் கதாநாயகியாக தமன்னாவும் நடித்து வருகின்றனர்.


அந்த வகையில் கீர்த்தி சுரேஷுன் சங்கீர்த் பங்சனுக்காக ஓர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவின் போட்ட அலப்பறை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதைக் காணலாம். இதனை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement