• May 21 2024

கணேஷ் குறித்து அமிர்தாவிடம் கேட்ட பாக்கியா- ராதிகாவால் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி- குழப்பத்தில் ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பாக்கியாவைச் சந்தித்த கணேசின் பெற்றோர் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயத்தைச் சொல்கின்றனர். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு இப்ப தான் அமிர்தாவும் எழிலும் சந்தோசமாக இருக்கிறாங்க அதுக்குள்ள இப்படியொரு பிரச்சினையா என்று கேட்கின்றார்.


மேலும் கணேசின் போட்டோவைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து அவர்கள் அமிர்தாவை எழில் கிட்ட இருந்து பிரிக்கனும் என்று நினைக்கல அமிர்தா சந்தோசமாக இருக்கனும். எந்த பிரச்சினையும் வராமல் நீங்க தான் பார்த்துக்கனும் என்று பாக்கியாவிடம் இருவரும் சொல்லுகின்றனர்.

தொடர்ந்து மயூவும் ராதிகாவும் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் கோபி என்ன விஷயம் என்று கேட்க, ராதிகா அம்மாவுக்கு 60வது பேர்த்டே வருது அது தான் மயூ சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிக் கொடுக்கலாம் எனறு இருக்கிறா என்ற விஷயத்தைச் சொல்ல கோபி மயூவைப் பாராட்டுகின்றார். தொடர்ந்து அம்மாவுக்கு நீங்களும் சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிக் கொடுக்கனும் கோபி என்கின்றார்.


சர்ப்ரைஸாக ஒரு செயின் வாங்கிக் கொடுக்கலாம் என்று ராதிகா சொல்ல, கோபி என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார்.அத்தோடு என் தலைல கட்டி விட்டிட்டாங்களே என்று புலம்புகின்றார். இவ்வாறு இருக்க, கிரடிட் பணம் கட்டசொல்லி பாங்கில் இருந்து போன் பண்ண கட்டுகின்றேன் என்றும் சமாளித்து போனை வைக்கின்றார்.

மறுபுறம் பாக்கியா தனியாக இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கும் போது அமிர்தா என்ன என்று விசாரிக்கின்றார். அப்போது அமிர்தாவிடம் பாக்கியா, கணேஷ் எப்படி இறந்தாரு என்று விஷயத்தைக் கேட்க அமிர்தாவும் சொல்கின்றார். அத்தோடு அம்மா அப்பா தனியாக இருக்கிறாங்க அவங்கள போய் பார்க்கனும் என்றும் சொல்லுகின்றார்.


தொடர்ந்து ராமமூர்த்தி நிலாவை பூங்காவுக்கு கூட்டிட்டு போய்ட்டு வருகின்றேன் என்று சொல்ல, பாக்கியா அதெல்லாம் வேணாம் இங்கையே விளையாடட்டும் என்று சொல்ல, ஈஸ்வரி எதுக்காக போக வேணாம் என்று சொல்லுற, நீ தானே குழந்தைகளை வெளில கூட்டிட்டு போகனும் என்று சொல்லுவ, இப்போ என்ன ஆச்சு என்று கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement