• Sep 20 2024

யாரை கேட்டு என் பையனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போன..! மகாவுடன் சண்டை போட்ட ராஜலட்சுமி! உண்மையை சொன்னாரா சூர்யா? ஆஹா கல்யாணம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்ப துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.

அதன்படி வேதாச்சலம் குடும்பத்தில் உள்ள அனைவரும்  திருப்பதி கோவிலுக்கு செல்ல, சூர்யா மட்டும் 'எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு' என்று  கோவிலுக்கு போகாமல் நிக்க, மகாவும் வீட்டில் இருந்து விடுகிறார்.


இதையடுத்து, நானே சமைச்சு சாப்பிடுரன் என்று பிரட் ஆம்லெட் போட்டார் சூர்யா. ஆனால் அது கருகிவிட்டது. அதன்பின் மகா சமைத்த உணவையும் உண்ணாமல் தூங்க, இரவு பசியில் ப்ரிட்ஜில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிடுகிறார். அதனை சாப்பிட்ட சூர்யாவிற்கு நடுராத்திரியில் வீசிங் வர  உடனே மகா வீசிங் ஸ்பிரே அடிக்கிறார்.

எனினும், அவசரத்திற்கு எடுத்த ஸ்பிரே காலியாக இருந்ததால் உடனடியாக  ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு டாக்டரிடம் சண்டையும் போட்டு ட்ரீட்மென்ட் செய்ய வைத்தார் மகா.


அதன்பின், கோவிலுக்கு சென்ற ராஜலட்சுமி மீண்டும் வந்து ' யாரை கேட்டு என் பையனை நீ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன' என்று கேட்க, 'எனக்கு பொண்டாட்டிங்கிற ரைட்ஸ் இருக்கு' என்று தன் தாலியை எடுத்து காட்டுகிறார் மகா. 

இதைப்பார்த்த சூர்யா 'இப்ப எதுக்கு மகாவை திட்டிகிட்டு இருக்கீங்க எனக்கு நடுராத்திரில திடிர்னு வீசிங் வந்துச்சு. அந்த நேரத்துல மகா தான் செக்யூரிட்டியோட ஸ்கூட்டில என்ன கூட்டிட்டு வந்தா. அவ சரி டைம்க்கு என்ன கூட்டிட்டு போய் இருக்காட்டி வேற மாதிரி ஆயிருக்கும்' என்று சொல்ல,  'என் பையன ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போனதுக்கு ரொம்ப நன்றி' என்று  ராஜலட்சுமி மகாவிடம் சொல்கிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.


Advertisement

Advertisement