• May 20 2024

மானம் ரோஷம் இல்லையான்னு அசிங்கமா கேட்டாங்க- சின்ன வீடு பபிதாவின் ஓபன் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்ததோடு 150 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடிய பிரபல நடிகை தான் பிரபல நடிகை பபிதா. இவர் நீண்ட இடைவெளியின் பின்னர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது எங்க அப்பா புரட்சித்தலைவர் கூட நிறைய படங்களில் நடித்திருப்பதோடு ஸ்டன்ட் மாஸ்டராகவும் கடமையாற்றியிருக்கின்றார். இதனாலேயே எனக்கு சினிமாவிற்குள் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. எங்கட வீட்டை முதலில் நான் நடிக்க வேண்டும் என்று கூறும் போது ஓகே சொல்லல.எங்க அப்பாட சொந்த ஊர்ல பொண்ணுங்க வயசுக்கு வந்தா எங்கையுமே விடமாட்டாங்க. அதே மாதிரி தான் என்னையும் வயசுக்கு வந்தவுடன் படிப்பை இடை நிறுத்திட்டாங்க.


நான் நடிக்கப் போறன் என்று சொன்ன போது எங்க அப்பா சம்மதிக்கவே இல்லையா. உனக்கு மானம் ரோஷம் இல்லையா நம்ம குடும்ப மரியாதை என்ன ஆகிறது உனக்கு கல்யாணம் பண்ணனும் என்று நாங்க இருக்கிறோம்.சினிமாவுக்கெல்லாம் விட முடியாது என்று கூறிட்டார். பின்னர் அழுது சாப்பிடாமல் இருந்து அடம் பிடிச்சு சண்டை போட்டு அப்படித் தான் சினிமாவிற்குள் நுழைந்தேன்.

அப்பவும் அப்பாட பெயர் சொல்லாமல் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னதால நானும் ஓகே என்று சொல்லி நடிக்க போய்ட்டேன். முன்பு நாம எந்த காரெக்டர்ல அறிமுகமாகின்றோமோ அதே வாய்ப்புத் தான் தொடர்ந்து வரும் அப்படித் தான் நானும் சோலோ டான்ஸ் தான் முதலில் ஆடினேன்.அதைத் தொடர்ந்து சோலோ டான்ஸ் ஆடுகின்ற வாய்ப்புத் தான் கிடைத்தது.


மேலும் முதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய போது எனக்கு ஐயாயிரம் ரூபா தந்தாங்க. அதில அட்வாண்ட்ஸ் ஆயிரம் ரூபா தந்தாங்க. அதை இப்பவும் எங்கட அம்மா வச்சிருக்கிறாங்க. நான் சில படத்தில சம்பளம் வாங்காமலே நடிச்சிருக்கின்றேன். எங்க அம்மா சம்பளம் கேட்கவும் மாட்டா அவங்க தருவதை வாங்கிட்டு போய்டுவோம். அதனால தான் எனக்கு அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி யாரும் கூப்பிடல என்றும் தெரிவித்தார்.


மேலும் சினிமாவில் நான் மோசமான கேரக்டரில் எதுவும் நடிக்கல. சினிமாவில இருக்கும் போது நிறைய பேர் என்னை லஃவ் பண்ண சொல்லி கேட்டாங்க ஆனால் எனக்கு அதற்கேற்ற சந்தர்ப்பங்கள் அமையல. நானும் யாரையும் லவ் பண்ணல. கிளாமராக ஆடுவதற்கு அப்பா ஓகே சொல்லல ஆனால் அம்மா தான் அப்பாவோட போராடி தான் என்னை நடிக்க வச்சாங்க. அத்தோடு வீட்டில நிறைய சண்டை அதனால தான் சீக்கிரமா என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டாங்க. இல்லை என்றால் இப்பவும் பண்ணிக்க மாட்டேன்.நான் சினிமாவில வந்த காலத்தில இருந்து எனக்கு எந்த மாதிரியான டாச்சர் அமைஞ்சதே இல்ல. சினிமாவிலோ இல்ல சீரியலிலோ சந்தர்ப்பம் அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன்.அதே மாதிரி பிக்பாஸ் கூப்பிட்டாலும் போவேன். என்னுடைய மகன் தான் என்னை நடிக்க சொல்லிட்டு இருக்கின்றார் அவருக்காகத் தான் எனக்கு நடிக்க ஆசை என்றும் கூறினார்.


Advertisement

Advertisement