• Sep 20 2024

அனிதா சம்பத்துக்கு மறுபடியும் கல்யாணம்.. இந்த முறை கொஞ்சம் கூட்டம் அதிகம் தான்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்பது குறித்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதாக சமூக வலைதளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்த புதிய சீரியலின் படப்பிடிப்பு கரூரில் நடந்து கொண்டிருப்பதாகவும் கரூரில் உள்ள ஒரு கொசுவலை தயாரிப்பு ஆலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் புகைப்படங்களுடன் அனிதா சம்பத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ’யாரடி நீ மோகினி’ சீரியல் இயக்குனர் பிரியன் தான் இந்த சீரியலை இயக்கி வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் கருரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அனிதா சம்பத் திருமண காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகைப்படத்தில் ’என் நிஜ கல்யாணத்தை விட சீரியல் கல்யாணத்துக்கு நிறைய கூட்டம் வந்திருக்கு’ என்று கூறியுள்ள அனிதா சம்பத், படப்பிடிப்பை பார்க்க பள்ளி குழந்தைகள் வந்துள்ளதாகவும் அவர் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.

இந்த அப்டேட்டில் இருந்து ஒரு புதிய சீரியல் படப்பிடிப்பு கரூரில் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஆனால் இந்த சீரியல் டைட்டில் என்ன? எப்போது எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை அனிதா சம்பத் தெரியப்படுத்தவில்லை என்பதால் அது குறித்த தகவல் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement