• Sep 20 2024

கணவரோடு சேர்ந்து அனிதா சம்பத் சொன்ன குட் நியூஸ் – குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன்4 இல் போட்டியாளரா பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் அனிதா சம்பத்.இவர் இதற்கு முதல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸில் கலந்து கொண்டு சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பிபி ஜோடிகளில் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி, டைட்டில் வின்னர் ஆனார் என்பதும் தெரிந்ததே.

தற்போது சினிமா வாய்ப்புகளாலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும், கலந்துகொண்டு இருக்கிறார். மேலும், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள, அவ்வப்போது மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் ஒரு குட் நியூஸ் ஒன்றை தனது கணவருடன் சேர்ந்து ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் “வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்❤️ “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக் அள்ளி குவித்து வருகின்றனர். புதிய வீடு வாங்கி குடியேறியுள்ள அனிதா சம்பத்துக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement