• Apr 28 2024

நடிகைகளிற்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தும் அனிகா… ஹீரோயின் ஆகணும் என்ற ஆசையா..? கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் குறிப்பாக மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.

அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த திரைப்படத்திலும் திறம்பட நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

இவ்வாறாக தொடர்ந்து கதாநாயகர்களின் மகளாக நடித்து வந்த அனிகாக்கு தற்போது தானும் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசை வந்திருக்கின்றது. இவ்வாறாக கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா சுரேந்திரன் சில ஷார்ட் பிலிமில் கதாநாயகியாக நடித்து கலக்கியிருக்கின்றார்.

இதில் சிறந்த பாராட்டுக்களை பெற்றிருந்தமையால் இவருக்கு வெள்ளி திரையிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கின்றது. இதன் காரணமாக அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்து வருவார்.

அதேபோன்று சமீபத்தில் சல்வார் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுக்து கண்ணைக் கவரும் வகையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அதுமட்டுமன்றி ஒரு சில ரசிகர்கள் "இந்த வயசிலும் ஏன்மா உனக்கு இந்த ஆசை" என அவரை கேள்வி கேட்டும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement