• Apr 28 2024

தளபதி விஜய்யால் வாய்ப்பை இழந்த செந்தில் கணேஷ்… ஏமாற்றி விட்டனரா படக்குழுவினர்..? வெளியான தகவல்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். கிட்டத்தட்ட 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவர் நடிப்பில் உருவான படங்களில் 'சிவகாசி, வேலாயுதம், திருப்பாச்சி, கில்லி' எனப் பல படங்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளன. இந்நிலையில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. இப்படத்தை வம்சி இயக்கி வருகின்றார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜய் பற்றி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகின்றது. அதாவது நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று 'பிகில்'. பிரபல இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் உருவாகிய இப்படமானது பாக்ஸ் ஆபிசில் ரூ. 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமே.

இப்படத்தில் விஜய்யின் குரலில் 'வெறித்தனம்' எனும் பாடல் உருவாகி வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் பாடலை முதன் முதலில் பாடியது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் தான் என ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

அதாவது முதலில் செந்தில் பாடியதை பதிவு செய்துள்ளனர். அதன்பின்னர் படக்குழுவினர் என்ன முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லையாம். விஜய்யை பாட வைத்து மீண்டும் இந்த பாடலை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இப்படத்தில் விஜய் பாடிய பாடல் தான் இடம்பெற்றுள்ளது. செந்தில் கணேஷ் பாடியது இடம்பெறவில்லை. இதன் காரணமாக தளபதி விஜய்க்காக, தான் பாடிய பாடலை படத்தில் காண ஆவலுடன் காத்திருந்த செந்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement