• Apr 28 2024

'புஷ்பா' பட நாயகனுக்கு கிடைத்த புது அங்கீகாரம்… குவியும் வாழ்த்துக்கள்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் பல சாதாரண மனிதர்களைக் கூட பிரபலங்களாக மாற்றி வருகின்றது. அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர் நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் 'அலவைகுந்தபுரமுலு' மற்றும் 'புஷ்பா' போன்றவையாகும். இவ்விரண்டு படங்களும் வெளியாகி பெரியளவிலான வெற்றியை ருசித்தன. இதனால் இவரின் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு வெளியான 'அலவைகுந்தபுரமுலு' திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டமை நாம் யாவரும் அறிந்த விடயமே.

அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளியான 'புஷ்பா' என்ற திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தினுடைய அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இதன் இரண்டாம் பாகத்திற்கு 'புஷ்பா தி ரூல்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் தொடர்பாக மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் 21-ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்ட பேரணி இடம்பெற இருக்கின்றது.

இதில் இவர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இதுவே வெளிநாடுகளில் நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய பேரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு அல்லு அர்ஜுன் க்கு கிடைத்திருப்பதையிட்டு திரையுலகில் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement