• May 21 2024

எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே ஒரு கம்பேர்ட் ஸோன் கிடையாது - அசீம் குறித்து வெளிப்படையாகப் பேசிய ஆயிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு கடந்த வாரம் தான் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. எந்த எவிக்ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறிச் சென்றனர். இந்த நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய ஆயிஷா பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார்.

அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்திருந்த போது இந்த பேட்டியில் முதலில் நிகழ்ச்சியின் நெறியாளர், விக்ரமன் மற்றும் அசீம் குறித்த கருத்துக்களை ஆயிஷாவிடம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஆயிஷா, கேள்வியை பாஸ் செய்யுமாறு ஜாலியாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய ஆயிஷா, “அனைவரும் விக்ரமன் மற்றும் அசீம் குறித்துதான் அதிகம் கேட்கின்றனர்.” என கேட்டார். அதற்கு நெறியாளர், “அசீமுடன் பல நேரங்களில் நல்ல ஒரு பிணைப்பு உங்களுக்கு இருந்தது, மற்ற நேரங்களில் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டீர்கள். அதேபோல நீங்கள் வெளியே வரும்போது விக்ரமன் ஏதோ சொல்ல வர, நீங்கள் “ஓகே..” என சொல்லி இருந்தீர்கள்.


 உங்கள் பார்வையில் அசீம் மற்றும் விக்ரமன் குறித்து சொல்லுங்கள்” என கேட்கிறார்.இதன் பின்னர் பேசும் ஆயிஷா,  “நான் இதை பத்தி பிக்பாஸ்க்கு வீட்டுக்குள்ளே நிறைய பேசி இருக்கேன். வெளியே பேசுவது புதுசு  இல்ல. அசீம் அண்ணாக்கு பிக்பாஸ் அப்படின்னா என்ன என்று நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சவரு. கரெக்டா விளையாடிட்டு இருக்காரு. எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே அவரோட கேமுக்கு நடுவுல நம்மள யூஸ் பண்ற மாதிரி ஒரு கேம் வரும். ஆனால் கேம் முடியுறப்போதான் நமக்கு ஒரு புரிதல் வரும். அவரோட ஸ்டேட்டர்ஜிக்கு நம்மளை யூஸ் பண்ணிக்கிட்டாரு அப்படிங்கற மாதிரி ஒரு ஃபீல் வரும். இது பொதுவாகவே நடக்கும்.

முதல்ல நடக்கும் போது அப்படி இப்படின்னு போயிடுச்சு. ஆனா அது தொடர்ந்துகிட்டே இருக்கிறப்பதான்,  அதை அவர்கிட்ட இருந்து  அப்படியே அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கும் அசீம் அண்ணாவுக்கும் முதல்ல சண்டை பெருசா வெடிச்சுருக்கும். மாத்தி மாத்தி கத்தி அந்த சண்டை பெருசா போச்சு. ஆனா அந்த டாஸ்க் முடிஞ்ச அடுத்த நிமிஷம், சாரிமா நாலு வருஷத்துல உன்ன இப்படி வாடி போடின்னு சொன்னதில்ல.. என அப்படியே நார்மலாக பேசும்போது, நானும் சரி நான் பிரச்சனை இல்லை, அப்படின்னு சொன்னேன். இவ்ளோ பேசிட்டு ஒருத்தரிடம் அடுத்த நிமிஷம் வந்து சாரி சொல்லும் போது, நமக்கும் புரியும்ல. ஓகே.. இது உங்க ப்ளேயா இருந்துச்சு.. அதுல என்னை இழுத்து விட்டீங்களா? அப்படின்னு தோணும்.” என குறிப்பிட்டார்.


மேலும் பேசியவர், “அந்த சண்டைக்கு பிறகு எங்களுக்குள் எல்லாமே நார்மல் ஆகிவிட்டது. நான் நார்மல் ஆகிவிட்டேன். ஆனால் எனக்கு அப்படி அவர்கள் பேசிவிட்டால், மீண்டும் எனக்கு அவர்களுடன் ஒரு கம்ஃபோர்ட் ஸோன் வராது. அந்த Vibe கட் ஆகிவிடும். மறுபடியும் வராது. அதுக்காக நான் மூஞ்ச காட்டிட்டு, மொறைச்சுகிட்டு, வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டு இருக்கும் நபர் கிடையாது.!” என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement