• Apr 27 2024

சூர்யாவை விரட்டிவிட்டு நடிகை பக்கத்திலேயே ரூம் போட்டுக்கொண்ட பாலா.. பகீர் கிளப்பிய பிரபல நடிகர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சூர்யாவின் திறமையை வெளிக்கொண்டு வந்த முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவ்வாறுஇருக்கையில் பாலாவின் மனைவி முத்து மலர் சமீபத்தில் அவரை விவாகரத்து செய்தார். கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றார்கள்.

இதையடுத்து பாலாவின் மகள் தனது தாய் முத்து மலருடன் வசித்து வருகின்றார்.இவ்வாறுஇருக்கையில்  பாலா இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகர் சூர்யா, வணங்கான் படத்தில் அவருடன் கூட்டணி அமைத்தார். மேலும் இந்தப் படத்தை நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்தனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்தார். எனினும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.


இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீரென விலகுவதாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ளனர். வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதுகுறித்து வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் பாலா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


அதன்படி வணங்கான் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில்  இருந்தே பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை என பேச்சு எழுந்ததாக கூறியுள்ளார். ஆனால் பாலா இதனை மறுத்து வந்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிய போதே ஹோட்டலில் தங்கியிருந்த பாலா தனது அறைக்கு அருகில் நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு ரூம் போட்டு கொடுத்ததாகவும் நடிகர் சூர்யாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவு தள்ளி ரூம் போட்டு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.


இதேபோல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த வேண்டும் என்று பாலா கூறியதாகவும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பாலா திமிராக நடந்து கொண்டதே சூர்யா வணங்கான் படத்தை டிராப் செய்ய காரணம் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அத்தோடு பாலா குறித்து மேலும் சில தகவல்கள் பரவி வருவதாகவும் அதையெல்லாம் பேசி தரத்தை குறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement

Advertisement