• Sep 19 2024

சர்ச்சையில் சிக்கி பிரபலமாகும் எண்ணத்தில் நடிகை வாணி போஜன்...இது என்ன கொடுமை சேர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெய்வ மகள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன்.இந்த சீரியல் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு குவிந்தன.

அந்தவகையில் அவர் முதலாவதாக நடித்த படம் ஓ மை கடவுளே . இப்படத்தில் இவர் நடித்த மீரா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து லாப் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த வாணி பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு தாழ் திறவா, லவ், ஊர்குருவி, ரேக்ளா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்ஆர் பிரபாகர். இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில், வாணி போஜனை வைத்து இத்தொடரை இயக்குகிறார்.இத் தொடர் ஜீ 5 தொலைகாட்சிக்காக உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த வெப் சீரிஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவைப் பற்றி சொல்லக்கூடிய உண்மை கதையாம் ஆனால் இயக்குநர் சர்ச்சையான கதையை கையில் எடுத்துள்ளார்.

இவர்களுக்குள் பலகாலமாக நட்பு இருந்தது அனைவரும் அறிந்ததே . ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாத சமயத்தில் இந்தக் கதையை இயக்கினால் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கும், இதனால் இந்த கதையை இயக்குநர் எப்படி கையாள போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏதாவது சர்ச்சை நிறைந்த கதையில் நடித்தால் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் இந்த தொடரில் ஒப்பந்தம் ஆகி இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் எந்த கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement