• May 20 2024

“இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு” சொல்லிட்டார் லோகேஷ் – மனம் திறந்து பேசிய நடிகை காயத்ரி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். மேலும் இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநுர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் படத்தில்,காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார்.

ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார். அத்தோடு இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகின்றார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடலை சென்னை தமிழில் பாடி இருந்தார்.அத்தோடு , இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா விக்ரம் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழாவை விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படம் குறித்து நடிகை காயத்ரி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.. அதில் அவர் தெரிவித்ததாவது, இவ்வளவு பெரிய படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை .சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா தான் என்னை சினிமா உலகிற்கு அழைத்து வந்தார். கமல் சாருடன் இணைந்து நடிக்க ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பகத் பாசில் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த படத்தில் அதுவும் நடந்த ஆகிவிட்டது. பகத் பாசிலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னால பண்ண முடியுமா? என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இதை நான் லோகேஷ் கனகராஜ்க்கு மெசேஜ் அனுப்பினேன். ’இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு’ லோகேஷ் சொன்னார். படத்தில் வேலை பார்த்த எல்லோரும் டெடிகேட்டிவாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று தெரிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement